மக்களால் மறக்கப்பட்ட இலுக்குவத்தை றம்மலக்க பிரதேசத்தில் அண்மையில் மண் சரிவினால் ஏற்பட்ட சேதத்தினால் சுமார் 6 பேர் வரை உயிரிழந்தனர். பல வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் சுமார் 26 குடும்பத்தினர் உடனடியாக அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்க இடமின்றி இருக்கும் நிலையில் குறித்த குடும்பத்தினருக்கு புதிய இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.